சனி, 1 நவம்பர், 2008

வாண்டுமாமா - சிறுவர் இலக்கியத்தின் சிற்பி!

நமது இல்லங்ளில் விழாக்கள் நடக்கும்போது கேமரா வைத்திருக்கும் நாம் போவோர் ருவோரையெல்லாம் போட்டோ எடுப்போம். நம்மை ஒரு போட்டோவில் கூ பதிய மறந்துவிடுவோம். அதுபோல உள்ளூர் கதைகள், உலக இலக்கியங்கள், புராங்கள், புதிர் கதைகள், அறிவியல் உண்மைகள், அறநெறிகள், வேடிக்கை விளையாட்டுகள், விந்தை செய்திகள் என எல்லாவற்றையும் நமக்கு அறிமுகம் செய்த வாண்டுமாமா தன்னை பற்றிய செய்திகளை ஏனோ நமக்கு தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் 'முற்போக்கு, பிற்போக்கு, விளிம்புநிலை, நவீனம், அது... இது...' என இருக்கிற இலக்கியத்தையும் கூறு போட்டு குழுக்கள்தான் உருவாகி கொண்டிருக்கின்றனவே தவிர குழந்தைகளுக்காக எழுதும் போக்கு சமீப ஆண்டுகளில் குறைந்துகொண்டே வருகிறது.

சிறுவர் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அவ்வளவாக கொண்டாடப்படுவதில்லை. இப்போக்கினால்தான் வாண்டுமாமா போன்றவர்கள் குடத்தில் இட்ட விளக்காகி போனார்கள்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தினமணியின் தமிழ் மணியில்? (அப்படித்தான் நினைக்கிறேன்) வாண்டுமாவை பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. நான் இதழியல் படித்தபோது தயாரித்த 'பாரதி' என்ற 'சிறுவர் இதழில்' அந்த கட்டுரையை 'சுட்டு' போட்டேன். உங்களுக்காக... சுட்டதை மீண்டும் சுட்டு இங்கே தந்துள்ளேன்.








வாண்டுமாமா விசிறிகள் அவரை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள் அன்புடன் அழைக்கிறேன். வரும் இடுகைகளில் வாண்டுமாவின் படைப்புகள், கதாபாத்திரங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த வலைப்பூவை சிறுவர் இலக்கியம் குறித்த செய்திகளுக்கு அர்ப்பணிக்க நினைக்கிறேன். காமிக்ஸ் பற்றிய செய்திகளையும் அவ்வபோது பூக்க செய்யலாம்.

நண்பர் விஷ்வாவின் குத்தல்களுக்கும், டாக்டர் சதீஷின் அவதூறுகளுக்கும் பதில் அளித்து விட்டேனா என வாசக பெருமக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்!

மீண்டும் சந்திப்போம் ..!

13 கருத்துகள்:

  1. மிகவும் சிறப்பாக இருந்தது இந்த இடுகை. வாண்டுமாமா அவர்களை பற்றி விபரங்கள் மற்றும் அவருடைய புகைப்படம் = இவை எல்லாம் கிடைத்தற்கரியவை.

    பாராட்டுகள் உங்களுக்கு. மேலும் இதைபோன்றே சிறப்பான இடுகைகளை வெளிஎடுவீர்கள் என்றே நம்புகிறேன்.

    //சிறுவர் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அவ்வளவாக கொண்டாடப்படுவதில்லை. இப்போக்கினால்தான் வாண்டுமாமா போன்றவர்கள் குடத்தில் இட்ட விளக்காகி போனார்கள்//

    முழுக்க முழுக்க உண்மை. இது தான் காலத்தின் கொடுமை என்பது.

    விதி வலியது என்பதை ஒப்புகொள்ளலம். ஆனால் விதி கொடியது என்பதை இதன் மூலம் அறியலாம்.

    //நான் இதழியல் படித்தபோது//

    இந்த கொடுமை வேறு நடந்ததா? அப்படியானால் நீங்க பிரஸ்'ஆ?.ரொம்ப ஜாகிரதய இருக்கனோம் சாமியோவ்.

    //இந்த வலைப்பூவை சிறுவர் இலக்கியம் குறித்த செய்திகளுக்கு அர்ப்பணிக்க நினைக்கிறேன். காமிக்ஸ் பற்றிய செய்திகளையும் அவ்வபோது பூக்க செய்யலாம்//

    அன்புடன் வரவேற்கிறோம்.

    //நண்பர் விஷ்வாவின் குத்தல்களுக்கும், டாக்டர் சதீஷின் அவதூறுகளுக்கும் பதில் அளித்து விட்டேனா என வாசக பெருமக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்!//

    என்ன கொடுமை சார் இது?
    பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது இதுதான்.

    உங்களை கிண்டல் செய்வது அவர், அவப்பெயர் வாங்குவது நானா?

    பதிலளிநீக்கு
  2. என்னன்னா இது?

    நோக்கே இது ந்யாயமா படுதோ?

    நீங்க ஒரு சோம்பேறி. அவங்க ரெண்டு பெரும் ஒரு மொள்ளமாரி. இதுக்கெல்லாம் எங்கள பஞ்சாயத்துக்கு கூப்பிட்டால் எப்படி? நேக்கு ஆத்துல நெறைய ஜோலி இருக்கு. அஹ்ம்ம்ம்.

    ஆனால் உங்க முயற்சி சூப்பர். ப்ளீஸ் continue பண்ணுங்கோன்னா

    பதிலளிநீக்கு
  3. மறக்க முடியுமா வாண்டுமாமாவை
    என் சிறு வயது தேவதை உலகின் போஷாக்களார் அல்லவா அவர்
    என் கனவுகளை வண்ணமாக்கிய ஓவியர் அவர், இன்றைய இலக்கிய பிரம்மாக்களை விட அவர் என் வாழ்வின் சில தருணங்களையாவது மகிழ்ச்சியாக்கியவர்.

    சிறப்பானவரைபற்றி உவப்பான பதிவு உற்சாகத்துடன் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. நண்பரே !
    தாங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்த் அய்யம்பாளையம்? எங்கள் ஊர் (நாமக்கல்) பக்கத்திலும் ஒரு அய்யம்பாளையம் உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. காமிக்ஸ் பூக்களுக்கு நேரம் ஒதுக்கி பின்னூட்டம் அளித்த நண்பர்கள் விஷ்வா, செழியன், சங்கர்விஸ்வலிங்கம் ,சிவ் அனைவருக்கும் நன்றி. உங்கள் நபிக்கையை பொய்யாக்க மாட்டேன். இன்னும் நிறைய... நிறைய... பேசுவோம்!

    சிவ்: நீங்களும் சான்றோர்கள் வாழும் சோழ வள நாடுதானா? தமிழ் நாட்டில் அய்யம்பாளையம் என்ற பெயரில் நிறைய ஊர்கள் உள்ளன. எனது ஊர் திருச்சி>சமயபுரம்>மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம்.

    பதிலளிநீக்கு
  6. நேரு மாமாவிற்கு அடுத்து எனக்கு நியாபகம் இருக்கும் இன்னொரு மாமா, வாண்டுமாமா தான் :). முதல்வரை பாட புத்தங்கள் மூலமும், நம்மவரை கதை புத்தங்களுடனும் படித்து தெரிந்து கொண்டேன்.

    வாண்டுமாமாவின் ஏனைய படைப்புகள் பற்றி, படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். உங்கள் வலைப்பூவை பின் தொடர பதிந்து விட்டேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்
    - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"

    பதிலளிநீக்கு
  7. நண்பரே,

    தங்களின் வலைப்பூ மிகவும் சிறந்த கண்ணோட்டத்தில் உள்ளது. ஆஅனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம். சுதந்திரத்துக்கு முன்பு வந்த புத்தகத்தை நீங்கள் பதிவிட போவதாக கிங் விஸ்வா அவரின் வலைப்பூவில் கூறி உள்ளார்.

    அப்படி ஆனால் அப்போதே காமிக்ஸ் தமிழில் வந்ததா? தயவு செய்து துரிதமாக அந்த பதிவை இடவும்.

    நன்றி.

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    பதிலளிநீக்கு
  8. From The Desk Of Rebel Ravi:

    ayyaampalayam venkateshwaran,

    Very nice start to your blog. you got a very good writing style which is very much humbling & attractive at the same time.

    we want to know more on these tamil comics legends.

    do you have any updates on Rani comics which was so great in the eighties?

    all the best for you.

    Rebel Ravi,

    Change is the Only constant thing in this world.

    பதிலளிநீக்கு
  9. அய்யா அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்களே,

    என்னை ஒரு அவதூறு பரப்புவராக நீங்கள் சித்தரித்திருந்தாலும் தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன். அற்புதமாகத் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    இதே போல் மேலும் பல பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

    தங்களின் பாட்டி கதைகள் அனுபவமும், இலக்கியவாதிகளைப் பற்றிய கருத்துக்களும் தங்களிடம் மேலும் பல சரக்குகள் இருப்பதை உணர்த்துகின்றது.

    பத்திரிக்கையியல் வேறு படித்திருப்பதால் தாங்கள் ஏன் தங்கள் வலைப்பூவில் அவ்வப்போது சில பாட்டிக்கதைகளை எழுதக்கூடாது? 'சுட்டு'ப் போட்டாலும் பரவாயில்லை!

    தங்கள் பனி மேலும் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. "வாண்டுமாமா" இந்த பெயர் என் சிறு வயதில் எனக்கு எப்படி எல்லாம் கதை சொல்லி இருக்கிறது, பூந்தளிர் போல ஒரு பத்திரிக்கை மீண்டும் வராதா என இன்னமும் ஏங்க வைக்கின்றதே,

    கபிஷின் வாழ் செய்யும் சுட்டித்தனங்கள்,

    காக்கா காளியின் சமயோஜிதம்,

    துப் துப் , சமந்தகா வின் வில்லத்தனங்கள்

    வாண்டுமாமாவின் படைப்பான "பலே பாலு",

    பார்வதி காமிக்ஸ் மறக்க முடியா "ஓநாய் கோட்டை"

    இன்னும் பசுமையாக இருக்கும் பூந்தளிரின் புத்தக வாசாம்

    அதன் பச்சை அட்டைப்படம்

    இன்னமும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்,

    அந்த குழந்தை பருவத்தையும், அதை செதுக்கிய வாண்டுமாமாவையும்

    http://aruvadai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. சிறுவர்களுக்கான “சின்னப்பூக்கள்” என்ற மின்னிதழை நடத்திவருகிறேன்! தங்களிடம் பழைய காமிக்ஸ் கலெக்‌ஷன், இருந்தால் தந்து உதவ முடியுமா? மேலும் உங்கள் படைப்புக்களையும் அனுப்பி வைக்கலாம். வாட்சப்: 9444091441. இமெயில் thalir.ssb@gmail.com

    பதிலளிநீக்கு

.
.
.

பின்னூட்டமிடுமுன்...


காமிக்ஸ், சிறுவர் இலக்கிய ஆர்வலர்களிடையே காமிக்ஸ் தொடர்பாக கதைக்கவே 'காமிக்ஸ் பூக்கள்' மலர்கிறது. நம்மை போல காமிக்ஸ் படிப்போரின் வட்டம் மிக குறுகியது. இங்கு பின்னோடமிடும் நபர்களுள் பெரும்பான்மையோர் ஒருவொருக்கொருவர் ஏதேனும் ஒருவகையில் அறிமுகமானவர்களே. எனவே இயல்பாகவே ஒருவித நகைச்சுவை பின்னோட்டங்களில் இழையோடும்.

காமிக்ஸ் வாசிப்பை பொறுத்தவரை 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற நமது தாத்தா கணியனின் (கணியன் பூங்குன்றனார்!) வார்த்தைகளே நமக்கு வேத வாக்கு!

எனவே, எந்த காமிக்ஸ் ஆர்வலரும் இங்கு சக ''நண்பர்களை'' கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பகடி செய்யலாம், எகத்தாளம் செய்யலாம், ஏளனம் செய்யலாம், ஜோக்-கடி-க்கலாம், கலாய்க்கலாம், காமெடி கீமெடி பண்ணலாம்...

ஒரே நிபந்தனை..! உங்களது வார்த்தைகள் நயமாக, நாகரீகமாக, 'நகை' ச் சுவையாக இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும்படி இருக்க கூடாது. இருப்பின் அவை நீக்கப்படும். நன்றி!